இந்தியா

ஹரியானா தொழிற்சாலை குண்டுவெடிப்பு – சிகிச்சை பலனின்றி 6 தொழிலாளர்கள் பலி

கடந்த வாரம் ஹரியானாவில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் காயமடைந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

முதல்வர் நயாப் சிங் சைனி, ரோஹ்டக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹ 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

காயமடைந்தவர்களில் நான்கு பேர் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தனர்.

32 வயதான ஜய், 27 வயதான ராமு, 38 வயதான ராஜேஷ் மற்றும் 37 வயதான விஜய் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்ததாக , இன்ஸ்பெக்டர் ஜகதீஷ் சந்தர் கூறினார்.

30 வயதுக்கு உட்பட்ட மேலும் இரு தொழிலாளர்கள் அடுத்தநாள் உயிரிழந்தனர்.

மார்ச் 16 அன்று தாருஹேரா தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தி நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இதில் 40 தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!