உலகம் செய்தி

காஸாவில் சுரங்கப்பாதையில் சிக்கிய ஹமாஸ் தலைவர்

காஸா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பதுங்கியிருக்கும் சுரங்கப்பாதைகளை தகர்த்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, காஸா பகுதியில் உள்ள சுமார் 130 சுரங்கப்பாதைகளை ராணுவம் ஏற்கனவே தாக்கி தகர்த்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் போராளிகள் தற்போது சுரங்கப்பாதைகளில் பதுங்கியிருப்பதாகவும், சுரங்கப்பாதைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை தயார் செய்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காஸா பகுதிக்குள் நுழைந்து காஸா நகரை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேலிய இராணுவம் அங்கு அமைந்துள்ள சுரங்கப்பாதைகளின் நுழைவாயில்களையும் சுற்றிவளைத்துள்ளதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி காஸாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக அறியப்படும் யாஹ்யா சின்வார் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர் வெளியே வர முடியாதவாறு இஸ்ரேல் இராணுவம் சுரங்கப்பாதையை சுற்றி வளைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பதில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஹமாஸ் தலைவருக்கு பலம் இல்லை என்றும், அவர் சுரங்கப்பாதையில் தனியாக இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், இஸ்ரேலின் இந்தக் கருத்துக்கு ஹமாஸ் இதுவரை பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காஸா நகரை சூழ்ந்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு அதனுள் நுழைவதற்கு இஸ்ரேல் பிரதமர் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content