உலகம்

ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள் – அதிரடியாக வெளியேற்றப்படும் 12,000 ஊழியர்கள்

கூகுள் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் முன்னணி நிறுவனமாக கூகுள் அறியப்படுகிறது. கொரேனா நோய்த் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில் கூகுள் நிறுவனத்தில் இருந்து ஊழியர் பணிநீக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த ஆண்டு சுமார் 12,000 பேர் ஊழியர்களை பணியிலிருந்து கூகுள் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில், தற்போது கூகுளில் நிர்வாக ரீதியாக பல துறைகளில் இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்கள் நிறுவன செயல்பாட்டை செம்மைப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், தொழிநுட்ப துறையில் நிலவி வரும் சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!