முதல் முறையாக தாக்குதல் ட்ரோன்களை இராணுவத்திற்கு வழங்கும் ஜெர்மனி!
ஜெர்மன் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முறையாக தாக்குதல் ட்ரோன்களை இராணுவத்திற்கு வழங்கும் திட்டங்களை நேற்று ஆதரித்துள்ளனர்.
இதற்கமைய இரண்டு ஜெர்மன் பாதுகாப்பு தொடக்க நிறுவனங்களான ஹெல்சிங் மற்றும் பெர்லினை தளமாகக் கொண்ட ஸ்டார்க் டிஃபென்ஸ் (Stark Defence) உடன் ஒப்பந்தங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் €536 மில்லியன் (S$800 மில்லியன்) மதிப்புடைய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யாவைத் தடுக்கவும் நேட்டோவின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமானது எனக் கூறும் அதிகாரிகள் 2027 ஆம் ஆண்டுக்குள் மேற்படி ட்ரோன்கள் லிதுவேனியாவிற்கு அனுப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.





