ஐரோப்பா

உக்ரைனுக்கு 1.4 பில்லியன் யூரோ இராணுவ உதவியை அறிவித்த ஜேர்மனி

ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வெள்ளிக்கிழமை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைனுக்கு 1.4 பில்லியன் யூரோ ($1.53 பில்லியன்) இராணுவ உதவிப் பொதியை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் இது மேற்கு நாடுகள் கெய்வை ஆதரிப்பதை நிறுத்தாது என்பதற்கான சமிக்ஞையாகும் என்று கூறியுள்ளார்.

கூட்டாளி நாடுகளான பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுடன் கூட்டாக இந்த உதவி வழங்கப்படும். மேலும் வான் பாதுகாப்பு, டாங்கிகள், போர் ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகள் ஆகியவை அடங்கும்.

“இது (ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்) புடினுக்கு ஒரு தெளிவான செய்தி – நேரத்திற்காக விளையாடுவது பலனளிக்காது. உக்ரைனுக்கான எங்கள் ஆதரவை நாங்கள் கைவிட மாட்டோம்,” என்று ஷோல்ஸ் கூறினார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்