இந்தியா செய்தி

டெல்லி விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஜெர்மன் நாட்டவர் மரணம்

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(IGI) சட்டவிரோத கடத்தல் பொருட்களை மீட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 77 வயதான ஜெர்மன் நாட்டவர் மேற்கு டெல்லியின் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26 அன்று, இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் இருந்து மத்திய புலனாய்வுப் பிரிவினரால் அசோக் குமார் கைது செய்யப்பட்டார்.

குமார் 270 காப்ஸ்யூல்களில் ஆறு கிலோகிராம் கோகோயின் மறைத்து வைத்திருந்ததாக சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

ஐந்து நாட்கள் போலீஸ் காவலுக்குப் பிறகு, குமார் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், DDU மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு ஆகஸ்ட் 27 அன்று அவர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அறிய ஜெர்மனி தூதரகத்தை அணுகியுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!