இலங்கை

கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, கோதுமை மா ‘குறிப்பிட்ட பொருட்கள்’ என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதன்படி, மக்களின் அத்தியாவசியப் பொருளான கோதுமை மா, கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களின் இருப்பு சந்தையில் தட்டுப்பாடு இன்றி பராமரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 8 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட பொருளாக இருந்த எரிவாயு, பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!