ஐரோப்பா

பிரான்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு – 02 சிறுவர்கள் பலி!

பிரான்சின் ட்ரெவோக்ஸில் (Trévoux) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றில் எரிவாயு கசிவு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

03, 05 வயதுடைய 02 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு வெடித்ததே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக அக்கட்டிடத்தில் வசித்து வந்த 70 குடும்பங்களும், அதன் அருகில் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!