உலகம் ஐரோப்பா செய்தி

சாதிக் கானின் வாக்குறுதி காற்றில் பறந்ததா? லண்டனில் தடையின்றித் தொடரும் சூதாட்ட விளம்பரங்கள்

லண்டன் போக்குவரத்து வலையமைப்பில் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற மேயர் சாதிக் கானின் 2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், சூதாட்ட நிறுவனங்கள் லண்டன் போக்குவரத்து சபையூடாக (TfL) சுமார் 5 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான விளம்பரங்களை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததே இந்தத் தாமதத்திற்குத் தார்மீகக் காரணம் என மேயர் தரப்பு விளக்கம் அளித்துள்ள போதிலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சூதாட்ட விளம்பரங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

லண்டனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சூதாட்ட அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான விளம்பரங்கள் மக்களின் வாழ்வைச் சீரழிப்பதாக ஏழு லண்டன் உள்ளூராட்சி சபைகள் கவலை தெரிவித்துள்ளன. உடனடித் தடையை அமுல்படுத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் மீண்டும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!