ஆசியா செய்தி

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடி – சிக்கிய 346 பேர்

சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 346 பேர் விசாரிக்கப்படுகின்றனர்.

அவர்களில் 231 பேர் ஆண்கள், 115 பேர் பெண்களாகும். அவர்கள் 16 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் காவல்துறை நிலப் பிரிவுகளும் இணைந்து இம்மாதம் 16ஆம் திகதி முதல் நேற்று வரை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அது குறித்துச் சிங்கப்பூர் பொலிஸார் இன்று அறிக்கை வெளியிட்டது. விசாரிக்கப்படும் 346 பேர் 1,300க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் 13.8 மில்லியன் வெள்ளிக்கும் மேல் பறிகொடுத்ததாக நம்பப்படுகிறது. மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுக்காலச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!