பிரான்ஸின் தொடர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
பிரான்ஸின் முன்னாள் மயக்க மருந்து நிபுணர் ஒருவர், 30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்தமைக்காக ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெசன்சோன் (Besançon) நகர நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஃபிரடெரிக் பெச்சியர் (Frédéric Péchier) என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த மருத்துவர், மாரடைப்பு அல்லது இரத்தப்போக்கை ஏற்படுத்தும் விஷ ஊசிகளை பயன்படுத்தி நோயாளிகளை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெச்சியர் (Péchier) நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
பெச்சியரை ‘தொடர் கொலையாளி’ மற்றும் ‘பிரெஞ்சு சட்ட வரலாற்றில் மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவர்’ என்று வழக்கறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.





