அரசியல் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டக்லஸ் தேவானந்தா சி.ஐ.டியினரால் கைது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியை, பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவன் ‘மாகந்துரே மதுஷிடம்’ முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் முன்னாள் அமைச்சருக்கு இருந்த தொடர்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!