இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பளிக்கும் தேசிய மக்கள் சக்தி!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை பொதுத் தேர்தலுக்கான தேசிய பட்டியலில் தேசிய மக்கள் சக்தி (NPP) இணைத்துள்ளது.
NPP பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க மற்றும் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் NPP தனது தேசியப் பட்டியலுக்கான வேட்புமனுக்களை நேற்று இறுதி செய்தது.
தேசிய பட்டியலில் வணிகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் உள்ளனர்.
(Visited 30 times, 30 visits today)