ஆசியா

பாகிஸ்தானில் மதபோதகர் மீது துப்பாக்கிச்சூடு..!

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்கள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா தாசில் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் மதபோதகராக செயல்பட்டு வருபவர் எலேசர் விக்கி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டு தலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் மீது ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினார். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மதபோதகர் விக்கியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content