இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை வேனும் மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லொரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள்உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை வேன் ஓட்டுநரும் அவர்களில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!