இலங்கை

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்

படுக்கைக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த 56 வயதான பெண்ணொருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி கீழ்ப்பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (18) பதிவாகியுள்ளது.

காசல்ரீ நீர்த் தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இருந்தே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் தனலெட்சுமி என்ற ​பெண், திடீரென காணாமல் போயுள்ளார். அக்கம் பக்கத்தினருடன் இணைந்து உறவினர்கள் தேடிய போதே, அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்தலத்துக்கு விரைந்துள்ள தடயவியல் பொலிஸாரும் நோர்வூட் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்