ஐரோப்பா

போலித் தகவல்கள் – 03 வயதிற்கு உட்பட குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஐரோப்பிய நாடு!

பின்லாந்தில் போலிச் செய்திகள் மற்றும் தகவல்களை கண்டறிவது தொடர்பில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் செயற்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.

03 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த நீண்டகால கல்வி அணுகுமுறை, ஊடகங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் தவறான தகவல்களை அடையாளம் காண்பதற்கும் மாணவர்கள் மத்தியில் அறிவு திறனை வளர்க்கும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில், கல்வியாளர்கள் இப்போது தங்கள் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நல்ல ஊடக எழுத்தறிவு திறன்களைக் கொண்டிருப்பது மிகப் பெரிய குடிமைத் திறன் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என  ஹெல்சின்கி நகரத்திற்கான கல்வியியல் நிபுணரான கியா ஹக்கலா (Kiia Hakkala) குறிப்பிட்டுள்ளார்.

“இது நாட்டின் பாதுகாப்பிற்கும் நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!