ஐரோப்பா

பாகிஸ்தான் அரிசி தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய ஒன்றியம்

பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி தொழில் வரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வழக்குகள் இருப்பதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

2023 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாஸ்மதி அரிசியின் சரக்குகளில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் டான் நாளிதழ் தெரிவித்தபடி, பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட அரிசியில் அதிக அளவு அப்லாடாக்சின் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்லாடாக்சின் என்பது பூஞ்சை அல்லது பூஞ்சையால் பாதிக்கப்பட்டால் அரிசியில் உருவாகும் ஒரு நச்சு என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்