சுற்றுலா பயணிகளுக்கான வரியை உயர்த்திய ஐரோப்பிய நாடு!
ஸ்பெயினின் – பார்சிலோனா (Barcelona) நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு இரவுக்கு €15 (S$22.35) யூரோ வரை வரி விதிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், மலிவு விலை வீடுகளுக்கு நிதியளிக்கவும் இந்த வரி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்டலோனியாவின் (Catalonia) பிராந்திய நாடாளுமன்றம், ஏப்ரல் முதல் பார்சிலோனாவில் உள்ள ஹோட்டல் விருந்தினர்களுக்கான வரியை ஒரு இரவுக்கு அதிகபட்சமாக €10 முதல் €15 வரை இரட்டிப்பாக்கும் சட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஹோட்டல் வகையைப் பொறுத்து வேறுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒருவர் தனது துணையுடன் நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு தற்போது கூடுதலாக €45.60 யூரோவை செலவழிக்க வேண்டும்.
அதேபோல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தினர்களிடம் ஒரு இரவுக்கு €15 யூரோ வரை கட்டணம் வசூலிக்கப்படலாம்.




