அரசியல் இலங்கை செய்தி

அடக்கமுறைக்காக அல்ல அவசரகால சட்டம்!

” அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அச்சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படமாட்டாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

“ பேரிடரையடுத்து நாட்டில் இன்னும் இயல்பு நிலை முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை. இடைத்தங்கள் முகாம்களில் மக்கள் இருக்கின்றனர். அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

எனவே, அனர்த்த நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. அத்தியாவசிய சேவை ஆணையாளர் பதவியை தக்கவைப்பதற்கும் அச்சட்டம் தேவைப்படுகின்றது.

மாறாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்கவோ அல்லது தவறான நோக்கங்களுக்காகவோ அவசர கால சட்டம் பயன்படுத்தப்படவில்லை. அச்சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிர்பார்க்கவில்லை.” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!