ஆசியா செய்தி

நிதி உதவிக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பாலஸ்தீன தூதரகம்

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையிடம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா வழங்கியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீன அகதிகளுக்கு நேரடி நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கு கல்வி, சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு பல்வேறு நாடுகளும் நிறுவனங்களும் உதவிகளை வழங்கி வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா வழங்கியுள்ளது.

காஸாவில் மனிதாபிமான தேவைகள் அதிகரித்து வரும் நிலைமையில், இவ்வாறான உதவிகள் அத்தியாவசியமானவை என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!