இலங்கை

இலங்கை எல்ல வனப்பகுதியில் தீ பரவல்: “போலி செய்தி”க்கு சுற்றுலா பிரதி அமைச்சர் பதில்

எல்ல வனப்பகுதியில் பரவி வரும் தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கு விளக்கமளித்த பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஹெலிகொப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.

எனவே, அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ​​தீயை அணைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர் கூறினார்.

எல்ல வனப்பகுதியில் தீயை அணைக்கும் நடவடிக்கை தொடர்பில் போலியான செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு சுற்றுலா பிரதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!