ஸ்பெயினில் ஈஸிஜெட் விமான தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்யவுள்ளதாக அறிவிப்பு!

இந்த கோடையில் ஸ்பெயின் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து ஈஸிஜெட் தொழிலாளர்கள் பெருமளவில் வெளிநடப்பு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25, 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பார்சிலோனா, அலிகாண்டே, மலகா மற்றும் பால்மா உள்ளிட்ட விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமான பணிப்பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இந்த வேலைநிறுத்தத்தை யுஎஸ்ஓ யூனியன் சிண்டிகல் ஒப்ரேரா தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 657 கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடும், இது 21 விமானங்களைப் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஸ்பானிஷ் ஈஸிஜெட் விமான பணிப்பெண்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது என்றும், ஸ்பானிஷ் தளங்களில் உள்ளவர்கள் மற்ற ஐரோப்பிய தளங்களில் உள்ளவர்களை விட 30% முதல் 200% வரை குறைவான ஊதியத்தைப் பெறுகிறார்கள் என்றும் தொழிற்சங்கம் வாதிட்டுள்ளது.
எனவே, மற்ற நாடுகளைப் போலவே, ‘கண்ணியமான, நியாயமான மற்றும் சமமான’ பணி நிலைமைகளை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.