இலங்கை

மண் சரிவில் சிக்கி உயர்தர மாணவன் பரிதமாக பலி

கொலன்னாவை, குடாலிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் இன்று அதிகாலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் அச்லா அகலங்க தொரபனே தேசிய பாடசாலையில் உயர்தர கல்வி கற்று வருகின்றார்.

அப்பகுதி மக்களும் பொலிஸாரும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் எடுத்து அவரைக் கண்டுபிடித்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

கொலன்னாவை செயலகப் பிரிவில் உள்ள பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு முதல் பெய்து வரும் அடை மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல வீதிகளின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொரபனே தேசிய பாடசாலை மற்றும் தாபனை ஆரம்ப பாடசாலை என்பன போதிய வருகையின் காரணமாக மூடப்பட்டடுள்ளன.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்