அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!

குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணைப் பிரிவினரால் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்தார்.

இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக பிஸ்டல் ரக துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய , வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அவர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுவருகின்றார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்பு காவல் உத்தரவு பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!