அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் நிவாரணம்: கட்சி நிதியை ஜே.வி.பி. பயன்படுத்தாதது ஏன்?

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது கட்சி நிதியை ஜே.வி.பி. ஏன் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்டாரநாயக்க நிதியத்தில் இருந்து 25 கோடி ரூபாவை சந்திரிக்கா அம்மையார் வழங்கினார்.

பண்டாரநாயக்க நிதியத்தில் எமது கட்சிக்கும் பங்களிப்பு உள்ளது. எனவே, சந்திரிக்காவின் நடவடிக்கை எமக்கு பெருமை அளிக்கின்றது.

ஜே.வி.பியிடம் கோடிக்கணக்கான கட்சி நிதியம் உள்ளது. முடிந்தால் 10 மில்லியன் ரூபாவை வழங்குமாறு சவால் விடுக்கின்றேன். ஜே.வி.பி. நிதியத்தில் இருந்து இன்னும் உதவி வழங்கப்படவில்லை.

6 பில்லியனுக்கு மேல் ஜே.வி.பியிடம் நிதி உள்ளது. அதனை பயன்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் பணத்தை எவருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.” என்றார் சாமர தஸநாயக்க எம்.பி.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!