நேரடி விமான சேவை: ரஷ்யா ஆர்வம்

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவிற்கு நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க ரஷ்யா ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த அமெரிக்க-ரஷ்ய இராஜதந்திர சந்திப்புகளின் இரண்டாவது சுற்றுப் பயணத்தின் போது இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இருப்பினும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.
ரஷ்யாவின் இந்த திட்டத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் விதிக்கப்பட்ட தொடர் தடைகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவுடனான வான்வெளியைத் துண்டித்தன.
ரஷ்யா மற்றும் மத்திய ஐரோப்பாவிற்கான துணை உதவி வெளியுறவுச் செயலாளர் சொனாட்டா கூல்டர் தலைமையிலான அமெரிக்கக் குழுவும், வெளியுறவுத்துறையின் வட அமெரிக்கப் பிரிவின் இயக்குநர் அலெக்சாண்டர் டார்ச்சீவ் தலைமையிலான ரஷ்யக் குழுவும் இஸ்தான்புல்லில் நடந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றன.
அமெரிக்க வெளியுறவுத்துறை தொடர்ந்து விவாதங்களை நடத்தி தூதரகங்களின் செயல்பாடுகளுக்கு பரஸ்பர நிதியுதவியை உறுதி செய்யும் என்று அறிவித்தது.