இலங்கை

துருக்கி மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவை!

கொழும்பு மற்றும் துருக்கிய நகரமான இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொழும்பு மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் Demet Sekercioglu மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில்  விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

“தற்போது, துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கையுடன் மாலத்தீவில் நிறுத்தத்தை உள்ளடக்கிய ஒரு பாதை வழியாக இருக்கிறது. , இதன் விளைவாக ஒன்றரை மணி நேரம் கூடுதல் பயண நேரம் கிடைக்கும்.

இந்த வழித்தடத்தால் ஏற்படும் தாமதம் பயணிகளால் விரும்பப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ப்டுள்ளது.

இந்த புதிய சேவையானது ஐரோப்பிய பயணிகளுக்கு பயனளிப்பது மட்டுமன்றி, இலங்கைக்கு பயணிக்க அவர்களை ஊக்குவிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content