இலங்கை செய்தி

தினேஷ் ஷாப்டரின் கொலை – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோரப்பட்ட பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், குறித்த பரிசோதனை அறிக்கை தொடர்பில்  ஆய்வாளருக்கு நினைவூட்டல் அனுப்புமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!