இலங்கை செய்தி

சிறையில் பட்டினியில் இருந்த தேசபந்து தென்னகோன்

நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை புறக்கணித்ததாக சிறைச் சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜரான இவர் 20 ஆம் திகதி வரை அங்குணுகொலபெலஸ்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவர் 20 ஆம் திகதி வரையில் சிறைச் சாலையில் எந்த ஒரு உணவையும் உட்கொள்ளவில்லை எனவும் எவருடனும் பேசவில்லை எனவும் சிறைச்சாலைக் கட்டில் அமர்ந்திருந்தவாறு பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் நேற்று மீண்டும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவர் தும்பறை சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!