வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)