ஐரோப்பா

இங்கிலாந்தில் மகப்பேறு செவிலியிர்களின் வேலைநேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை!

இங்கிலாந்தில் மகப்பேறு செவிலியர்களின் வேலை நேரங்களுக்கு சட்டப்பூர்வ கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 14,000 க்கும் மேற்பட்டோர் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்கள் ஆபத்தான நீண்ட ஷிப்டுகளில் (shifts) வேலை செய்வதாக தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வதாகவும், இது மனசோர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜெனிஃபர் காஹில்லின் ( Jennifer Cahill) என்ற மருத்துவ பணியாளர் 30 மணிநேரம் வேலை செய்ததை தொடர்ந்து உயிரிழந்திருந்தார். இந்த விடயம் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்தே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மகப்பேறு சேவைகள் குறித்த சுயாதீன விசாரணை நடந்து வருவதாக சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!