இலங்கை கிரிக்கெட் தொடர்பில் 21ம் திகதி தீர்மானம்
இலங்கை கிரிக்கட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய கூட்டம் நவம்பர் 18 முதல் 21 வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது மற்றும் அதன் இயக்குநர்கள் குழு கூட்டம் 21ம் திகதி நடைபெற உள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடுகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் ஆராயவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)





