இலங்கையில் அரச நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் – விசாரணைகள் ஆரம்பம்!

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இணைய தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தொழிநுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் கனக ஹேரத், சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26ஆம் திகதி பல அரச நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தரவுகள் காணாமல்போயுள்ளதாகவும், அதனை மீட்டெடுக்க இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)