ஆசியா

பங்களாதேஷில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு – 1500 இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிப்பு!

பங்களாதேஷில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து 20 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்சில் புதன்கிழமை அவரது அவாமி லீக் கட்சி உறுப்பினர்கள் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) நடத்திய பேரணியைத் தடுக்க முயன்றதைத் தொடர்ந்து மோதல்கள் வெடித்தன.

மோதல்கள் நடந்த பகுதியில் செங்கற்கள், கற்கள் மற்றும் உடைந்த ஜன்னல்கள் சிதறிக்கிடந்தன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுடன், மாவட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட போலீசார், வீரர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

“கோபால்கஞ்சில் சட்டம் ஒழுங்கு நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது, அமைதியாக உள்ளது” என்று காவல்துறை அறிவித்துள்ளது.

 

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்