இலங்கை

அமெரிக்காவின் வரி விதிப்பினால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

இலங்கை மீது அமெரிக்கா 44 சதவீத வரி விதிப்பை கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் சாத்தியம் நிலவுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கையானது இலங்கையில் உள்ள சில தொழிற்சாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வரிவிதிப்பானது இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்திற்கு பாதகமான சமிக்ஞையை காட்டுகின்றது.

விசேடமாக இலங்கையின் ஏற்றுமதியில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவைச் சென்றடைகின்றன.

ஏனைய நாடுகளுக்கு இணையாக, இலங்கை மீதான வரி விதிப்பின் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!