பிரான்ஸில் அதிகரித்துவரும் குற்றங்கள் : அமேசன் காட்டில் கட்டப்படும் சிறைச்சாலை!

பிரெஞ்சு கயானாவில் மிகப்பெரிய உயர் பாதுகாப்பு சிறைச்சாலயை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதியமைச்சர் அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தீ2028 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படக்கூடியவிர இஸ்லாமியர்களை அடைக்க குறித்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் விநியோகச் சங்கிலியின் “அனைத்து மட்டங்களிலும்” ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை இந்த சிறைச்சாலை குறிவைக்கும் என்று ஜெரால்ட் டர்மானின் தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படக்கூடிய வகையில் சுமார் €400 மில்லியன் செலவில் குறித்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
சமீபத்திய மாதங்களில் பிரான்ஸ் முழுவதும் சிறைச்சாலைகள் மற்றும் ஊழியர்கள் குறிவைக்கப்பட்ட குற்றவியல் கும்பல்களுடன் தொடர்புடைய தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறைச்சாலையில் 500 பேர் வரை தங்க முடியும், மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை அடைக்க ஒரு தனிப் பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு கயானா தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் பிரான்சின் ஒரு பகுதியாகும். அதன் குடியிருப்பாளர்கள் பிரெஞ்சு தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் மற்றும் பிரெஞ்சு சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிற மானியங்களை அணுக முடியும்.