இந்திய மாணவரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது

ஹமாஸை ஆதரித்ததாகக் கூறி அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான பத்ர் கான் சூரிய் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.
சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையிலும், அவரது மனைவி பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக வழக்கறிஞர் ஹசன் அகமது குற்றம் சாட்டினார்.
பதர் கான் திங்கள்கிழமை இரவு வர்ஜீனியாவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
(Visited 11 times, 1 visits today)