ஆசியா

ஜப்பான் எயார்லைன்ஸ் விமானத்தில் மது அருந்திய விமானியால் சர்ச்சை – 3 விமானங்கள் தாமதம்

ஜப்பான் எயார்லைன்ஸின் விமானி மது அருந்தியதால் 3 விமானங்கள் தாமதமடைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து இவ்வாண்டு இரண்டாவது முறையாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு நிறுவனத்தைக் கண்டித்திருக்கிறது.

விமான நிறுவனத்தின் தலைவர் மிட்சுக்கோ தொத்தொரி செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நடந்த சம்பவத்திற்கு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம் 28ஆம் திகதி விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவரால் மறுநாள் ஜப்பானின் நகோயாவுக்கு விமானத்தை ஓட்டிச் செல்ல இயலவில்லை.

அதனால் 3 விமானங்கள் தாமதமடைந்தன. ஒரு விமானம் 18 மணி நேரம் வரை தாமதத்தை எதிர்நோக்கியது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!