கொழும்பு சிறைச்சாலையில் நிரம்பி வழியும் கைதிகளால் கடும் நெரிசல்

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் 650 கைதிகளை அடைக்க முடியும் எனவும் தற்போது சுமார் 2,100 பேர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் ஆகியோரும் கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மற்ற சிறைச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான கைதிகள் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
(Visited 8 times, 1 visits today)