இலங்கை

கலைப்பீட மாணவர்களை தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ளக் கூடாது!

கலைப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதியர் நியமனம் வழங்க முன்வைக்கப்பட்ட யோசனையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் அபாயம் காணப்படுவதாக அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்இ ‘ஒரு செவிலியர் உயர் கல்வியைப் பெற்றால் அது நோயாளிக்கு நன்மை பயக்கும். விஞ்ஞானப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

ஜனாதிபதிக்கு யாரோ ஒரு குறுகிய நோக்கு அறிவுரை வழங்கியதாக நினைக்கிறோம்.அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிவப்பு அறிவிப்பு விடுகிறோம். மருத்துவமனைகளின் தாதியர்கள்அமைதியற்றவர்களாக உள்ளனர்இ இது நல்ல விஷயம் அல்லஇ தீவு முழுவதும் ஏராளமான எதிர்ப்புகள் உள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!