நிலக்கரி மோசடி: நம்பிக்கையில்லாப் பிரேரணை கோருகிறது மஹிந்த அணி!
“தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP வலியுறுத்தியுள்ளது.
அநுராதபுரத்தில் இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மொட்டு கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi இவ்வாறு வலியுறுத்தினார்.
“ தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.
அது தொடர்பில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எமது கட்சி அந்த முடிவையே எடுக்கும்.
அரசாங்கம் வசம் 159 ஆசனங்கள் இருப்பதால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படலாம்.
ஆனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் நம்பிக்கை இழந்துவிட்டது.
மாகாணசபைத் தேர்தலை நடத்தப்பட்டால் இது புலனாகும். எனவே, அரசாங்கம் தேர்தலை உடன் நடத்த வேண்டும்.” எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி குறிப்பிட்டார்.




