நூலிழையில் உயிர் தப்பிய சீன பாராகிளைடிங் வீரர்

மேகச் சுழலில் சிக்கிய சீன பாராகிளைடர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவர் வானத்தில் உயரமாக இழுக்கப்பட்டு தரையில் இருந்து சுமார் 26,400 அடி உயரத்தில் சிக்கிக்கொண்டார்.
இந்த சம்பவத்தை விவரித்த லியு ஜி, வடக்கு சீனாவில் உள்ள கிலியன் ஷான் மலைகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது சுமார் -40 டிகிரி பாரன்ஹீட் உறைபனி வெப்பநிலையில் சிக்கிக்கொண்டதாகக் தெரிவித்தார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 9,850 அடி உயரத்தில் இருந்த ஒரு மலையிலிருந்து குதித்த சிறிது நேரத்திலேயே, மேக உறிஞ்சுதல் எனப்படும் வானத்தில் மேல்நோக்கி இழுக்கப்பட்டதாகக் கூறினார்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், கைகள் குளிராக இருந்ததாகவும் லியு குறிப்பிட்டார்.
லியு மேலும் கூறுகையில், தான் எப்போதும் சுயநினைவுடன் இருந்ததாகவும், பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.