ஜமைக்காவில் கஞ்சா கலந்த இனிப்புகளை சாப்பிட்ட குழந்தைகள்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/jmaika-jpg.webp)
ஜமைக்காவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா கலந்த இனிப்பு விருந்தில் தெரியாமல் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஃபேவல் வில்லியம்ஸ், குழந்தைகள் யாரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை என்று மருத்துவர்களை மேற்கோள் காட்டி கூறினார்.
இந்த இனிப்பு உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அதன்படி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தின் பின்னர், பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உணவில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.