ஆசியா செய்தி

சீனாவை உலுக்கிய சிக்குன்குனியா – ஆயிர கணக்கானோர் பாதிப்பு

 

தென் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா நோய்த் தொற்றுகள் கடந்த சில வாரங்களில் வேகமாக அதிகரித்து, பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த வைரஸ், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் கடித்ததன் மூலம் மனிதர்களிடம் பரவுகிறது.

காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலி போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்துகிறது. எனினும், இறப்புகள் குறைவாகவே நிகழ்கின்றன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

குவாங்டோங் அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டில் பூந்தொட்டிகள், காபி இயந்திரங்கள் மற்றும் உபரி போத்தல்கள் போன்ற இடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

இது கடுமையாக மீறப்பட்டால், 10,000 யுவான் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி