ஐரோப்பாவில் சாம்பியன் லீக் போட்டிகள் – ஐ.எஸ் அமைப்பு விடுத்த எச்சரிக்கை

ஐரோப்பாவில் சாம்பியன் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் தாக்குதல்கைள நடத்துமாறு ஐ.எஸ் அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகவலையடுத்து சாம்பியன்ஸ் லீக் நடைபெறும் போட்டிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் தாக்குதல்களை நடத்தப்பட வேண்டும் என ஐ.எஸ் ஆதரவு ஊடகத்தில் பல சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.
UEfa அச்சுறுத்தல்கள் பற்றி அறிந்திருப்பதாகக் கூறியது. மாட்ரிட், பாரிஸ் மற்றும் லண்டனில் விளையாட்டுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று கூறியது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அமைச்சர்கள் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.
(Visited 25 times, 1 visits today)