இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கத்திற்காக கஞ்சாசெடியை பயிரிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளமை தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக அவர் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)