ஆசியா

தென்கொரியாவில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான பேருந்துகள் – 80 பேர் காயம்!

தென் கொரியாவில் இன்று (16.06) சியோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளி பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது.

ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடந்ததாக கங்வான் மாநில தீயணைப்புத் தலைமையகத்தின் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காயங்களுடன் மீட்டனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!