பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த பேருந்து; மூவருக்கு நேர்ந்த கதி

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று கொடுங்களூருக்கு சென்ற தனியார் பேருந்து செவ்வூர் பகுதியின் அஞ்சம்கல்லு பகுதியில் நிழற்குடையில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது மோதியது.
அங்கு வேகமாக வந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)