நைஜீரியாவின் பாலத்தில் இருந்து கவிழந்த பேருந்து : 22 பேர் பலி!

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவில் ஒரு பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் மாநில ஆளுநர் கூறினார்.
இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் தெற்கு மாநிலமான ஓகுனில் நடந்த நைஜீரிய தேசிய விளையாட்டு விழாவில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
போட்டிகள் நிறைவடைந்து வீடு திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து தலைகீழாக விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இருந்து தப்பியவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)